search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் கைது"

    பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகரின் தம்பி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவருடைய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவா. இவர் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது தம்பி ராமன் (வயது 34), கட்டிட தொழிலாளி.

    கடந்த 14-ந்தேதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி பணிக்கன்குப்பம் முந்திரி காட்டில் உள்ள ஒரு மரத்தில் ராமன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுகுறித்து ராமனின் அண்ணன் தேவா போலீசில் புகார் செய்தார். அதில் எனது தம்பி ராமனை யாரோ கடத்தி அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

    புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மேற்பார்வையில், கடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ராமனின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் இருந்து யாருக்கு ராமன் அதிகமாக பேசியுள்ளார் என்ற தகவல்களை சேகரித்தனர்.

    அதில் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சந்தோஷ்குமார்(19) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இவர் கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ராமன் மாயமான அன்றைய தினம், தனது வீட்டில் இருந்து சென்ற போது அவருடன் சந்தோஷ்குமாரும் சென்றதை அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து போலீசாருக்கு சந்தோஷ்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அவர் சொர்ணாவூர் கிராம நிர்வாக அலுவலர் இளஞ்செழியனிடம் சரணடைந்தார். இதுபற்றி அறிந்த, காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று, சந்தோஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.


    கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார்-அனிதா

    அப்போது கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-

    ராமன், அவரது மனைவி அனிதா ஆகியோர் எனது சொந்த கிராமமான சொர்ணாவூரில் கடந்த ஆண்டு நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தனர். அங்கு சென்ற நான், ராமன், அவரது மனைவியிடம் பேசி பழகினேன். இந்த பழக்கத்தால், ராமனின் வீட்டுக்கும் செல்ல ஆரம்பித்தேன்.

    இந்த நிலையில் ராமன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவராக இருந்தார். இதனால் என்னை தனது ஆசைக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். அதற்கு நானும் உடன்பட்டேன். இதையடுத்து அடிக்கடி ராமன் எனக்கு போன் செய்து அழைத்து, தனது ஆசையை நிறைவேற்றி வந்தார்.

    இதற்கிடையே, அனிதாவுக்கும் எனக்கும் உள்ள பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தோம். எங்கள் கள்ளகாதலுக்கு ராமன் இடையூறாக இருந்தார்.

    ஒரு கட்டத்தில் ராமனுடன் உள்ள ஓரினச்சேர்க்கை விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானகிவிடும் என்பதால் நான் மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும் என்னை கட்டாயப்படுத்தி ராமன், அவருடைய ஆசைக்கு இணங்க செய்து வந்தார்.

    இதையடுத்து, அனிதாவிடம் இதுபற்றி தெரிவித்தேன். அப்போது அவர், ராமனை தீர்த்துக் கட்டிவிடலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் இருவரும் சேர்ந்து ராமனை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

    அதன்படி கடந்த 14-ந்தேதி எனக்கு ராமன் போன் செய்து ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். அப்போது, நான் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில் ஒன்றை, வாங்கி அதில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து எடுத்து சென்றேன். இருவரும் வழக்கம் போல் பணிக்கன்குப்பத்தில் உள்ள முந்திரிதோப்புக்கு சென்று, அங்கு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டோம்.

    பின்னர் ராமனுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்தேன். தூக்க மாத்திரை கலந்து இருப்பது பற்றி தெரியாமல், அவர் அதை குடித்து முடித்த, சிறிது நேரத்தில் ராமன் மயங்கி விழுந்தார். பின்னர் கைலியை எடுத்து ராமனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்தது போல் இருப்பதற்காக அவரது உடலை கயிற்றில் கட்டி மரத்தில் தொங்க விட்டேன். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். இந்த நிலையில் போலீசார் என்னை தேடுவது பற்றி அறிந்தவுடன், எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்று அறிந்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சந்தோஷ்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ராமனின் மனைவி அனிதாவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனிதா, சந்தோஷ்குமார் ஆகியோரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகரின் தம்பி கொலை தொடர்பாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவா. இவர் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது தம்பி ராமன் (வயது 34), கட்டிட தொழிலாளி.

    கடந்த 14-ந் தேதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் ராமனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள பணிக்கன்குப்பம் முந்திரி காட்டில் உள்ள ஒரு மரத்தில் ராமன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து ராமனின் அண்ணன் தேவா போலீசில் புகார் செய்தார். அதில் எனது தம்பி ராமனை யாரோ கடத்தி அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

    புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது.

    தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ராமனின் செல்போனை கைபற்றிய போலீசார் அதில் இருந்து யாருக்கு ராமன் அதிகமாக பேசியுள்ளார் என்ற தகவல்களை சேகரித்தனர்.

    அப்போது பண்ருட்டி மேல்பாதி சொர்ணாவூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் எண்ணிற்கு ராமன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சந்தோஷ்குமாரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராமனை, சந்தோஷ்குமார் கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறிய தகவல்கள் வருமாறு:-

    சந்தோஷ்குமார் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சொர்ணாவூரில் ராமனின் அக்காள் வீடு உள்ளது. அங்கு ராமன் அடிக்கடி வருவார். அவரது அக்காள் மகளும், சந்தோஷ்குமாரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இதனால் அடிக்கடி ராமனின் அக்காள் வீட்டுக்கு சந்தோஷ்குமார் சென்றுள்ளார்.

    அப்போது ராமனுக்கும், சந்தோஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று ஜாலியாக சுற்றி திரிந்துள்ளனர்.

    இந்த நிலையில் சந்தோஷ் குமாரும், ராமனும் ஓரின சேர்க்கை பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர்.

    அதன் பிறகு ராமன் செல்போன் மூலம் சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு அடிக்கடி ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார். வரமறுத்தாலும் அவரை தொடர்ந்து ராமன் வற்புறுத்தி வந்துள்ளார். இந்த பழக்கம் வெளியில் தெரிந்து விட்டால் அவமானமாகி விடும் என்பதால் ராமனை கொலை செய்ய சந்தோஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.

    கடந்த 14-ந் தேதி அன்று பணிக்கன்குப்பம் முந்திரி காட்டுக்கு வருமாறு சந்தோஷ்குமாரை, ராமன் அழைத்துள்ளார். உடனே சந்தோஷ்குமார் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி கொண்டு அங்கு சென்றுள்ளார்.

    பின்னர் அந்த மதுவில் தூக்க மாத்திரையை கலந்து ராமனுக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார்.

    அதன் பின்னர் கைலியால் ராமனின் கழுத்தை இறுக்கி சந்தோஷ்குமார் கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து ராமன் தற்கொலை செய்து கொண்டார் என்பதுபோல் இருப்பதற்காக அவரது உடலில் கயிற்றை கட்டி அங்குள்ள மரத்தில் சந்தோஷ்குமார் தொங்க விட்டுள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    ×